வத்தளையில் வெடிமருந்துகள், சிம் அட்டைகள் அடங்கிய பொதி மீட்பு
இலங்கை
வத்தளை, கால சந்தி பகுதியில் வெடிமருந்துகள் அடங்கிய பொதி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து நடத்திய சோதனையின் போது இந்தப் பொதி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பொதிகயில் நான்கு T-56 ரக துப்பாக்கி ரவைகள், நான்கு ரிவால்வர் ரவைகள், இரண்டு பிஸ்டல் ரவைகள் மற்றும் 11 வகையான சிம் கார்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பொதி தொடர்பாக பொல்பகொடை, யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபருக்கு கல்னேவ, கல்தோட்டை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளால் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை மேலும் விசாரிக்க 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.























