• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமூகக்  கட்டமைப்பு சிதைந்து போயுள்ளது

இலங்கை

”இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட  சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமையே ”என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று இடம்பெற்ற கல்லூரிதின விழாவில் பிரதம விருந்தினராகக்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” சமூகப் பாதுகாப்பென்பது இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதொன்றாகும், அன்றைய காலங்களில் கிராமங்களில் ஒரு அதிபர் அல்லது ஆசிரியர் வீடுகளில் மக்கள் காலையில் கூடுவார்கள் மக்களை வழிப்படுத்துபவராக அவர்கள் காணப்பட்டார்கள். அது தீர்க்கமான நல்ல முடிவுகளை தருகின்ற சமூகங்களை கொண்டிருந்தது.

இன்று இது மாறியுள்ளது மீண்டும் இவ்வாறு வரவேண்டும் என்றால் முன்பு போல இறுக்கமான கட்டமைப்புக்கள் சமூகங்களில் உருவாக்கப்படவேண்டும்.

அதுமட்டுமல்ல பாரம்பரிய விழாக்களை கொண்டாடிவதன் மூலம் அதனை அடுத்த சந்ததிகளுக்கு கடத்தவேண்டிய தேவை உள்ளது.

கல்வியில் எவ்வாறான சீரமைப்புக்களை ஏற்படுத்தினாலும் சிறந்த ஆசிரியரால்தான் முழுமையான மாணவனை உருவாக்கமுடியும் சமூகத்தில் சவால்களை சந்திக்ககூடிய மாணவனை உருவாக்குவது சிறந்த ஆசிரியரால்தான் முடியும்.

இதில் கலாசாலையின் பணி மகத்தானது. பாரம்பரிய கற்பித்தல் முறைகள் மாறி நவீன கற்பித்தல் முறை இன்று வந்துவிட்டது.இது மாணவருக்கு நன்மையாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply