• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகள், விசேட கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பன இன்று நள்ளிரவு 12 மணி முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் மே 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டே பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. மேலும்  விதிகளை மீறி மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்  பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply