• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல்

இலங்கை

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2 வார காலப் பகுதியில் வெளியிடப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதி குறித்த மாணவர் கையேடு இதுவரை வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இவ்வாறு மாணவர் கையேடு வெளியிடுவது கால தாமதமாகியுள்ளதோடு, கையேட்டை வெளியிடாது மாணவர்களை அனுமதிப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கையேட்டை அச்சிட்டு வெளியிடுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply