• Welcome to TamilsGuide
செய்திகள் 1

11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கை

11 மாவட்டங்களில் மின்னல் தாக்குதல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி மேற்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று (செவ்வாய்கிழமை) இரவு 10.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply