• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின்னல் தாக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

இலங்கை

இரத்தோட்டை, வெல்காலயாய பிரதேசத்தில் மின்னல் தாக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான  12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் வீட்டில் இருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இவர்களது சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், முல்லைத்தீவு – ஐயன்குளம் பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

ஐயன்குளம் பகுதியில் மரத்தின் கீழே நின்றிருந்தவர்களே மின்னல் தாக்கத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் ஐயன்குளம் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 39 வயதான மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஐயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா உள்ளிட்ட நாட்டில் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டவலியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
 

Leave a Reply