• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு

இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்

தொழிலாளர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் உழைப்பாளர்களாக அன்றி தாங்கள் கையேந்தும் வர்க்கத்தில் உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்திருந்தனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை போராட்டம் இடம்பெற்றது. கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன் கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்திற்கு முன்பாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
 

Leave a Reply