• Welcome to TamilsGuide
செய்திகள் 1

11 வருடங்களின் பின்னர் இடம்பெறவுள்ள சர்வதேச ரக்பி போட்டி

இலங்கை

2024ஆம் ஆண்டுக்கான ஆசிய பிரிவு ரக்பி சாம்பியன்ஷிப் இன்று இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது.  11 வருடங்களின் பின்னரே சர்வதேச ரக்பி போட்டியொன்று இலங்கையில் நடத்தப்படவுள்ளது.

இப் போட்டியில் இந்தியா, கஜகஸ்தான், கத்தார் மற்றும் இலங்கையை சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளதுடன் அனைத்து போட்டிகளும் கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

கத்தார் மற்றும் கஜகஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும் போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply