• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் வியாபாரிகள் கவலை

இலங்கை

யாழ்ப்பாணத்தில் இம்முறை புத்தாண்டு வியாபாரங்கள் பெரியளவில் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் ஆர்வமின்றி காணப்படுத்தாகவும் , யாழில் நிலவும் கடுமையான வெப்பமான கால நிலையால் மக்கள் கடைத்தெருவுக்கு வருவது குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் இனி வரும் இரு நாட்களும் வியாபாரம் களைகட்டும் என தாம் எதிர்பார்த்துக்  காத்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply