• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இது – அநுர

இலங்கை

த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த  ஆட்சி தேவை எனவும், ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இதுவாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முறையான சட்டத்தை மதிக்கும் சமூகமும் தேவை.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த  ஆட்சி தேவை குற்றங்கள் நிறைந்த சமூகத்தை சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்கு ஒழுக்கமான அரசியல் சக்தி தேவை ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இதுவாகும்.

நாட்டில்  சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தி தயார்.ஜனாதிபதிக்கு இன்று மக்கள் ஆதரவு இல்லை.

ஏனைய கட்சிகளுக்கு எதிராக நாம் தேசிய மக்கள் சக்தியை  கட்டியெழுப்பவில்லை.

மக்கள் ஆதரவு எமக்க உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவு வழங்கிய பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்று  எமது மே தின கூட்டணியில் பங்கேற்றுள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து  எம்முடன் இணைந்துள்ளனர் என என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply