• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொட்டுக் கட்சி விரைவில் வீடு செல்ல நேரிடும்

இலங்கை

ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ஷ தரப்பினரின் கூட்டணியில்  இடம்பெறும் இறுதி மே தின நிகழ்வு இன்றாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளாவது ” இம்முறை மே தினம் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும்.ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ஷ தரப்பினரின் கூட்டிணைவில் இடம்பெறும் இறுதி மே தின நிகழ்வு இதுவாகும்.

எதிர்வரும் மே தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலமாகும்.மக்கள் அபிமானத்தை வென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தின் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினம் இடம்பெறும் இந்த இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

அன்று கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ தரப்பினரை விரட்டியடிப்பதற்கு மக்கள் வெள்ளம் அணிதிரண்ட முதலாவது இடம்.132 பேரின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதியான ரணில்விக்ரமசிங்கவும். பொதுஜன பெரமுன எனும் கள்வர் கூட்டமும் விரைவில் வீடு செல்ல நேரிடும்” என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply