• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கேப்பாப்பாப்பிலவு காணி உரிமையாளர்களுக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது காணி உரிமையாளர்கள், தாம்  எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் தொடர்பாக ஆளுநருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply