• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நானே மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் – திலித் ஜயவீர

இலங்கை

நாட்டில் எந்தத் தேர்தலை நடத்த வேண்டுமென அமெரிக்க பிரஜையான பஷில் ராஜபக்ஷ தீர்மானிக்க முடியாதென மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித் அவர்,

மொட்டு கட்சி நாட்டை நேசிக்கும் 69 இலட்சம் மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. மொட்டு சின்னத்தை எனது கைகளினால் நானே வரைந்தேன்.

அந்த கட்சி பஷில் ராஜபக்‌ஷவின் கட்சி அல்ல. நாமல் ராஜபக்‌ஷவின் கட்சி அல்ல. அது நாட்டை நேசிக்கும் 69 இலட்சம் மக்களின் கட்சி.

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னையே தெரிவு செய்ய வேண்டும்.

மொட்டு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரனதுங்க கூறுகிறார். பஷிலின் மொட்டு கட்சிக்கே ஜனாதிபதி வேட்பாளர் இல்லை.

நாட்டை நேசிக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மொட்டுக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நான் இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply