• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதியின் புதிய திட்டம்

இலங்கை

தெற்காசியாவில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.

தெற்காசியாவில், புதிய பொருளாதார மாற்றத்திற்கான தமது நோக்கை முன்வைத்த ஜனாதிபதி, பிராந்திய நாடுகளுக்கு இடையில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய புதிய மாதிரியையும் முன்மொழிந்துள்ளார்.
 

Leave a Reply