• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அத்தனகலு ஓயாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

இலங்கை

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களங்கள் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் துனமல பிரதேசத்திலிருந்து 4.64 மீற்றராக அதிகரித்துள்ளது. இந்நிலை 5.50 மீட்டராக அதிகரித்தால் பெரும் வெள்ளச் சூழல் உருவாக கூடும் என குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply