• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் ரத்து

இலங்கை

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) அனைத்து உப கட்டுப்பாட்டாளர்களும் நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மாளிகாவத்தை ரயில் வீதியின் நுழைவாயிலில் வைத்து புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர், உப கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் நேற்று முதல் பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply