• Welcome to TamilsGuide
செய்திகள் 1

​திருகோணமலையில் புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு

இலங்கை

இலங்கை வாழ் தமிழ், சிங்கள மக்களால் இன்று சித்திரை புத்தாண்டு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருகோணமலை வாழ் மக்கள் பக்திப் பெருக்குடன் புத்தாண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்

​புத்தாண்டை முன்னிட்டு, திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் அதிகாலை முதல் விசேட அபிஷேக மற்றும் ஆராதனை பூசைகள் நடைபெற்றன.

​ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து, இல்லங்களில் மங்களகரமான நேரத்தில் ‘கைவிசேஷம்’ பரிமாறிக் கொள்ளப்பட்டது. மேலும், திருகோணமலையின் பல பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்வுகளும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன.

​பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இந்தப் புத்தாண்டை வரவேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply