• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம் - மேலும் ஒருவர் கைது

இலங்கை

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் கைவிடப்பட்ட கிணற்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட மற்றொரு பெண் அதே இடத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் கிழக்கு மாகாண குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

சந்தேக நபர் வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வத்தளையைச் சேர்ந்த 49 வயதான மருந்தக உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, கொக்கடிச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் நேற்று (30) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னதாக காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

கொக்கடிச்சோலை பொலிஸார் இது தொட்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply