• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரதான மார்க்கத்தில் 4 புகையிரத சேவைகள் இரத்து

இலங்கை

புகையிரத பெட்டிகள் இன்மையால் 4 புகையிரத சேவைகளை இரத்துச் செய்ய புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி தொடருந்து பாதையிலேயே குறித்த சேவைகள் இரத்தாகியுள்ளதுடன்,
எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பிரதான மார்க்கத்தில் காலை 7.20 இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து ராகமை நோக்கி பயணிக்கும் புகையிர சேவையும், ராகமையில் இருந்து காலை 7.30 இற்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் புகையிர சேவைகளும் இரத்தாகியுள்ளன.

அத்துடன் களனிவெளி வீதியின் பாதுக்கை புகையிர நிலையத்தில் இருந்து அதிகாலை 5.20 இற்கு கொழும்பு  கோட்டை நோக்கி பயணிக்கும் புகையிர சேவையும் கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 7.15 அளவில் பாதுக்கை நோக்கி பயணிக்கும் புகையிர சேவையும் இரத்தாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply