• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவில்-தொலைத்தொடர்பு கம்பங்களைத் துவம்சம் செய்த காட்டு யானைகள்

இலங்கை

வவுனியா,செட்டிக்குளம் – மன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள 16 தொலைத்தொடர்பு கம்பங்களைக் காட்டு யானைகள் இன்று(18) சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் மன்னார் வீதியில் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு கிலோமீற்றர் முன்பாக டயலொக் மற்றும் மொபிட்டல் தொடர்பாடல் வலையமைப்பினரால் அமைக்கப்பட்ட பதினாறு தொலைத்தொடர்பு கம்பங்களை இவ்வாறு காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேதமடைந்த தொலைத் தொடர்புக் கம்பங்களை சரிசெய்யும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பயிர் நிலங்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply