• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது

இலங்கை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் உள்ள ஆட்டு மந்தையொன்றில் இருந்து  35 ஆடுகளை கும்பலொன்று திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினமான நேற்று குறித்த ஆட்டு மந்தையில் பாதுகாப்புப் பணியில் இருந்த இருவரைத் தாக்கிவிட்டு கும்பலொன்று சுமார் 9 லட்சத்து முப்பத்தையாயிரம் ரூபாய்  பெறுமதியான 35 ஆடுகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான இருவரில் ஒருவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில்  வற்றாப்பளை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனவும், அவரிடமிருந்து 15 ஆடுகள்  மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமொன்றையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply