• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாகனங்களை இறக்குமதி செய்யத் தீர்மானம்

இலங்கை

தீர்வையற்ற வாகன இறக்குமதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, அவர்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 10 வருடங்களாக தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

12 வருடங்களுக்கும் மேலாக பாவனையிலுள்ள பழைய வாகனங்களையே பெரும்பாலோனோர் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply