• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கை


ஏப்ரல் மாத்தில் முதல் 9 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 50 ஆயிரத்து 537 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் எனவும், இதில், 9 ஆயிரத்து 725 பேர் இந்தியாவில் இருந்தும், 5 ஆயிரத்து 878 பேர் லண்டனில் இருந்தும், 5 ஆயிரத்து 57 பேர் ரஷ்யாவில் இருந்தும் வருகை தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
 

Leave a Reply