இணையத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை கல்வி அமைச்சிடம் கையளிப்பு
இலங்கை
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (வியாழக்கிழமை) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
இணையத்தளத்தின் எதிர்கால பாதுகாப்பு தொடர்பான அனைத்து விபரங்களும் இதில் உள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
மேலும் இணையதளத்தில் உள்ள சில பலவீனம் காரணமாக இது நடந்ததாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகள் அதில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இலங்கையில் உள்ள இணைய இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.