• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் மணல் அகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல்

இலங்கை

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் மணல் அகழ்வு தொடர்பாக நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், சுற்றுச்சூழல் தொடர்பான அமைப்புகளின் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் மற்றும் பிரஜைகள் குழுவின் தலைவர், கடற்படையினர் ,பொலிஸார் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற சட்டபூர்வமான மற்றும் சட்ட விரோதமான மணல் அகழ்வு சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் சட்டவிரோத மண் அகழ்வை தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 

Leave a Reply