• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மனைவியை மருமகனுக்கு திருமணம் செய்து வைத்த மாமனார்! வினோதமான காதல்கதை

சினிமா

மாமியார் மீது காதல் கொண்ட மருமகனுக்கு நபர் ஒருவர் தனது மனைவியை திருமணம் செய்துவைத்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

பீகாரில் உள்ள பாங்கா நகரைச் சேர்ந்த சிக்கந்தர் யாதவ். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது மனைவியின் தந்தை வீட்டில், அதாவது மாமனார், மாமியார் வீட்டில் தங்கியுள்ளார்.

மாமனார் திலேஷ்வருக்கு 55 வயதும், மாமியார் கீதா தேவிக்கு 45 ஆகியுள்ள நிலையில், சிக்கந்தர்க்கு தனது மாமியார் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் நெருக்கம் திலேஷ்வருக்கு சந்தேகத்தினை ஏற்படுத்திய நிலையில், இறுதியில் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். ஊர் பஞ்சாயத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரித்த போது இவர்களின் காதல் விவகாரம் தெரியவந்துள்ளது.

இருவருக்கும் திருமணம்

சிக்கந்தரின் சம்மதத்துடன் இருவருக்கும் அனைவரது முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டதுடன், சட்டப்படியும் நீதிமன்றத்திலும் திருமணம் நடைபெற்றுள்ளதாம்.

மனைவியை மருமகனுக்கு திருமணம் வைத்ததோடு, அவரை இரண்டாவது கணவர் வீட்டிற்கும் அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த காதல்கதை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, குறித்த மாமனாரை பலரும் பராட்டி வருவதுடன், மீம்ஸையும் அள்ளி வீசியுள்ளனர்.

Leave a Reply