• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்

சினிமா

தமிழ் திரைத்துறையில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் கடைசியாக ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார்.

அதிரடி சண்டை படமாக தயாரான இப்படம் வெளியாகி உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் Filament Pictures என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

நிறுவனத்தின் முதல் படம் குறித்த அப்டேட் மே 3ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் நெல்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் எனது பயணம் 20 வயதில் தொடங்கியது. பல ஆண்டுகளாக, இந்தத் துறையில் எனது வளர்ச்சிக்கு பல ஏற்ற தாழ்வுகள் பங்களித்துள்ளன.

எல்லாவற்றுக்கும் மத்தியில், ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்திருப்பது எப்போதுமே எனது நிலையான விருப்பமாக இருந்து வருகிறது. இன்று எனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' தொடங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Filament Pictures-ல், பரந்த பார்வையாளர்களை மகிழ்விக்கும் ஆக்கப்பூர்வமான மற்றும் சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை உருவாக்குவதே எங்களின் முதன்மையான குறிக்கோள்.

எங்கள் பார்வையை மிகச்சரியாக உள்ளடக்கிய மற்றும் நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நாங்கள் தொடங்குகிறோம்.

மே 3ஆம் தேதி எங்களின் முதல் திட்ட அறிவிப்புக்காக காத்திருங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
 

Leave a Reply