• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இராணுவ வீரர்களின் நலனுக்காக பிரத்தியேகமான திணைக்களம்

கனடா

இராணுவ வீரர்களின் நலனுக்காக பிரத்தியேகமான திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு அனைத்து இராணுவ வீரர்களின் நலன்புரியும் சூழ்நிலையில் மிகவும் திட்டவட்டமாக முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஐக்கியப் இராணுவ மாநாட்டில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இராணுவ நலனுக்காக சேவை அதிகாரசபை இருப்பதாகவும், அது இதுவரை ஆற்றிவரும் சேவையைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இராணுவ நலனுக்காக அமெரிக்காவைப் போன்று தனியான திணைக்களம் தேவை எனவும், அதற்காக புதிய கட்டளைகள் உருவாக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேசத்திற்காக உழைத்த ஒரே எதிர்க்கட்சி ஜக்கிய மக்கள் சக்தி என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சிலர் மேடைகளில் விசித்திரக் கதைகளைச் சொல்லி மக்களை தங்கள் கனவு உலகில் ஏமாற்றுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply