• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிலநடுக்கத்துக்கு நடுவே குழந்தைகளை பாதுகாத்த நர்ஸ்களின் துணிச்சல்

தைவானில் கடந்த 3-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியது தொடர்பான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் சிலர் குழந்தைகளை பாதுகாப்பதை காட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இந்த காட்சி மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. எக்ஸ் தளத்தில் வைரலான இந்த வீடியோவில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக நர்ஸ்கள் கட்டிலை ஒன்றாக சேர்த்து பாதுகாக்கும் காட்சிகள் உள்ளது. நிலநடுக்கம் நின்று நிலைமை சீராகும் வரை அந்த கட்டில்கள் மோதாமல் நர்ஸ்கள் தடுக்கும் காட்சிகளும் அதில் உள்ளது.

இந்த வீடியோ வைரலாகிய நிலையில், பயனர்கள் பலரும் நர்ஸ்களின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.
 

Leave a Reply