• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் கைதான முதியவர் - சிக்கிய 58,000 சிறுவர்களின் மோசமான புகைப்படங்கள்

பிரித்தானியாவில் சுமார் 60 ஆயிரம் சிறுவர்களின் மோசமான புகைப்படங்களை வைத்திருந்த 85 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்தின் Surreyயில் வசித்து வந்த Mundy என்ற முதியவர், தேசிய முகமை குற்றவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
 
அவரிடம் இருந்து Floppy discகள், CDகள், USBகள் மற்றும் Hard driveகள் என 47 டிஜிட்டல் சேமிப்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டது.

அவற்றில் 31 பிள்ளைகளின் அநாகரீகமான படங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுபோன்று மொத்தமாக 58,000 சிறுவர்களின் புகைப்படங்களை அவர் இரு தசாப்தங்களாக சேமித்து வைத்திருந்துள்ளார்.

அவர் பதிவிறக்கம் செய்த படங்களில் பெரும்பாலானவை 8 முதல் 15 வயதுடைய சிறுவர்களுடையது ஆகும். இதற்காக Peer-to-Peer பகிர்வு முறையை Mundy பயன்படுத்தினார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 1998யில் பிபிசியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், குழந்தைகள் தொடர்பினால் தவறான படங்களை முதலில் பார்த்ததாக ஒப்புக்கொண்டார்.

அத்துடன் துஷ்பிரயோகத்தை வரையறை என்னவென்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனது ஆர்வம் இன்பத்திற்காக மட்டுமே என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சிறுவர்களின் மோசமான படங்கள் தொடர்பான 3 குற்றங்களை ஒப்புக்கொண்ட Mundyக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
 

Leave a Reply