திருமண நாளில் வில்லியம் கேட் தம்பதியர் வெளியிட்ட புகைப்படம்
பிரித்தானிய இளவரசரும், வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியமுக்கும் இளவரசி கேட்டுக்கும் நேற்று திருமண நினைவு நாள்.
தம்பதியர் தங்கள் 13ஆவது திருமண நாள் விழாவைக் கொண்டாடும் நிலையில், சமூக ஊடகம் ஒன்றில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.
அந்த புகைப்படம் அவர்களுடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது!
பொதுவாக திருமண நாள் போன்ற விசேஷ தினங்களில் கருப்பு வெள்ளை புகைப்படங்களை பெரும்பாலானோர் வெளியிடமாட்டார்கள்.
ஏற்கனவே, இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்களும் , ராஜ குடும்ப நலம் விரும்பிகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், தம்பதியர் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை வெளியிட, தாங்கள் அதிர்ந்துபோனதாக அவர்களுடைய ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், வில்லியம் கேட் தம்பதியர் அவ்வப்போது கருப்பு வெள்ளை புகைப்படங்களை வெளியிடுவதுண்டு. அதில் எதிர்மறையான அர்த்தம் எதுவுமில்லை என்று கூறும் பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்று, 2023ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, தங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை சொல்வதற்காக அவர்கள் தேர்வு செய்திருந்ததும் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம்தான் என்கிறது.