• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிடியாணை வழங்க சென்றபோது துப்பாக்கிச்சூடு - 3 பொலிஸார் மரணம்

அமெரிக்காவில் பிடியாணை வழங்க சென்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வட கரோலினாவின் Charlotte பகுதியில் உள்ள நபர் ஒருவர், துப்பாக்கி வைத்திருந்ததற்காக பொலிஸார் பிடியாணை வழங்க சென்றனர்.
  
அப்போது சந்தேக நபர் பொலிஸார் மற்றும் அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த திடீர் தாக்குதலில் 3 அமெரிக்க மார்ஷல்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் 5 சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

''Charlotte நகரத்திற்கும், சட்ட அமலாக்கத் துறைக்கும் இன்று ஒரு முழுமையான சோக நாள். இன்று நாம் நமது சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் சில ஹீரோக்களை இழந்துவிட்டோம்'' என்று CMPD தலைவர் ஜானி ஜென்னிங்ஸ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ''அதிகாரிகள் துப்பாக்கிச்சூடுகளை சந்தித்தனர். ஆனால், அவர்கள் திருப்பி தாக்கினர். பின்னர் சந்தேக நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்'' என்றார். இச்சம்பவம் வட கரோலினாவில் பாரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Leave a Reply