• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திடீர் சுகயீனத்தால் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

இலங்கை

மொரட்டுவைப்  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதாசிவம் வினோத் என்ற மாணவன் நேற்றிரவு திடீர் சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கட்டிடக்கலை பீடத்தின் இறுதியாண்டு மாணவரான இவர்,பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் தனது நண்பர்களுடன் விடுதிக்கு அருகில் உள்ள தேநீர் கடையில் தேநீர்  அருந்திவிட்டு விடுதிக்கு திரும்பியபோது கையடக்கத் தொலைபேசியைப்  பயன்படுத்தியுள்ளார் எனவும், இதன்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply