• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திறன் வகுப்பறைகளை திறந்து வைத்த எதிர்க்கட்சி தலைவர்

இலங்கை

முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் திறன் வகுப்பறைகள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது

நாட்டில் மாணவர்களின் கற்றல்திறனை விருத்தி செய்யும்நோக்கில் தெரிவு செய்யப்பட்ட பிரபல பாடசாலைகளில் திறன்வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று முஸ்லிம்மகாவித்தியாலயத்தின் திறன் வகுப்பறைகள் இன்று திறந்துவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் இணைசெயலாளர் உமாசந்திரா பிரகாஷ் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மற்றும் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வை முன்னிட்டு இன்றைய தினம் பாடசாலையில் விசேட சோதனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது

அத்துடன் இடதுகரை முத்தையன்கட்டு ஒட்டுசுட்டான் பாடசாலை மற்றும் விசுவமடு பாரதிபுரம் ஆகிய பாடசாலைகளிலுட் இன்றைய தினம் திறன்வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டது
 

Leave a Reply