• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவில் விசேட அதிரடிப்படையினர் சோதனை முன்னெடுப்பு

இலங்கை

முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் திறன் வகுப்பறைகள் இன்றையதினம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் குறித்த பாடசாலையில் விஷேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இன்றையதினம் இடதுகரை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான் பாடசாலை, விசுவமடு பாரதிபுரம் பாடசாலையிலும் திறன் வகுப்பறைகள் இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply