• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுகாதார பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்

இலங்கை

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை 03 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு இன்று   ( செவ்வாய்கிழமை ) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியர்களுக்கு இணையான (டிஏடி)   மற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு வீதத்தை போன்ற கொடுப்பனவில்   50% மே மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply