• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கேட் மிடில்டன் தொடர்பில் வெளியான புதிய பின்னணி

லண்டன் மருத்துவமனையில் இருந்து ஆவணங்கள் கசிந்த நிலையிலேயே வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமது புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்கும் நெருக்கடி ஏற்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் உடல் நிலை தொடர்பில் சுமார் ஒருவார காலம் பல்வேறு கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், மார்ச் 22ம் திகதி காணொளி ஊடாக தமது புற்றுநோய் பாதிப்பு குறித்து அவர் வெளிப்படையாக அறிவித்தார்.
  
ஆனால் கேட் மிடில்டன் தொடர்பில், அவரது மருத்துவ ஆவணங்கள் கசிய வாய்ப்புள்ளதாக கருதிய கென்சிங்டன் அரண்மனை அவசர அவசரமாக காணொளி ஒன்றை தயாரித்து வெளியிட்டதாகவே கூறப்படுகிறது.

அந்த ஆவணங்கள் கசிந்த நிலையில், வேறு வழியின்றியே கேட் மிடில்டன் தமது நிலை குறித்து வெளிப்படையாக பேசும் நெருக்கடி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, அந்த ஆவணங்கள் கசிய காரணம் யார் என்பது இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை. சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வந்த நிலையிலேயே கேட் மிடில்டன் தமது பாதிப்பு தொடர்பில் வெளிப்படையாக பேசினார்.

ஆனால் சார்லஸ் மன்னர் போலவே, எந்தவகையான புற்றுநோய் என்பதை கேட் மிடில்டனும் குறிப்பிடவில்லை. கேட் மிடில்டன் தமது புற்றுநோய் தொடர்பில் காணொளி வெளியிடும் சில தினங்களுக்கு முன்னர் தான், அவரது மருத்துவ ஆவணங்களில் பாதுகாப்பு அத்துமீறல் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியானது.

இதனையடுத்து அரண்மனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், இந்த விவகாரத்தில் முழு விசாரணையும் முன்னெடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 
 

Leave a Reply