• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு

இலங்கை

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்று நேற்றைய தினம் (01 ) தீக்கிரையாகியுள்ளது.

அதனால் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

வீடு திடீரென தீ பிடித்து எரிந்ததாகவும் , அதனை கட்டுப்படுத்த முயன்ற போதிலும் தீ வேகமாக பரவியதால் வீடு தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a Reply