• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இலங்கை

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்புத்துறை கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலம் கடற்படையின் சுழியோடிகள் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply