• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பின்வாங்கும் பிரித்தானியாவுக்காக வெட்கப்படுகிறேன் - முன்னாள் உள்துறை செயலாளர் ஆவேசம் 

சினிமா

பிரித்தானியாவில் யூத-விரோதத்தின் எழுச்சி குறித்து வெட்கப்படுவதாக முன்னாள் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார். 

லண்டனில் கடந்த ஆண்டு நவம்பரில் போர்நிறுத்த தினத்தின்போது, பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை கையாள்வது தொடர்பாக நடந்த போராட்டத்தை தொடர்ந்து, உள்துறை செயலாளர் பதவில் சுயெல்லா பிரேவர்மேன் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், இது இஸ்ரேலில் இருந்து வெளியேறுவதற்கான நேரம் அல்ல என்றும், பாலஸ்தீன சார்பு உணர்வின் பிடியில் இருப்பதாக வெளியுறவு அலுவலகத்தை சுயெல்லா சாடியுள்ளார். 

இஸ்ரேலுக்கான எங்கள் ஆதரவை வலுப்படுத்துவதற்கான நேரம் என்று கூறிய அவர், ஹமாஸ் கைதிகள் செஞ்சிலுவைச் சங்கத்தின் வருகையை அனுமதிக்காவிட்டால் ஆயுத விற்பனையை நிறுத்துவேன் என்று, இஸ்ரேலிய அதிகாரிகளிடம் கூறியதாகக் கூறப்படும் லார்ட் கேமரூனை அவர் தாக்கி பேசினார். 

மேலும் சுயெல்லா பிரேவர்மேன் அளித்த நேர்காணலில், ''கடந்த வாரம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாடு குறித்து ஏமாற்றம் அளிக்கிறது. பிரித்தானியாவில் யூத-விரோதத்தின் எழுச்சி குறித்து வெட்கப்படுகிறேன். 

இஸ்ரேலுக்கான அதன் ஆதரவில் இருந்து அரசாங்கம் பின்வாங்குகிறது. வார இறுதியில் பிரித்தானியாவில் உள்ள யூதர்களை வார இறுதியில் மத்திய லண்டனுக்கு செல்ல பயப்படும் யூத மக்களை சந்தித்தபோது மனம் உடைந்ததாக உணர்ந்தேன்'' என தெரிவித்தார்.

அத்துடன் தொடக்கத்தில் அணிவகுப்புகள் துளிர்விடத் தயங்கியதும், 'வலிமையான அணுகுமுறை' இல்லாததுமே இன்று நம் வீதிகளில் 'வெகுஜன பயங்கரவாதத்தின் நிகழ்வு'க்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.   
 

Leave a Reply