• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வித்தியா கொலை வழக்கின் குற்றவாளி சிறையில் மரணம்

இலங்கை

யாழ். புங்குடிதீவு மாணவி சிவலோநாதன் வித்தியா கூட்டுப் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பல்லேகல தும்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

புங்குடதீவு கைட்ஸ் பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் தவகுமார் செந்தில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரை கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்ததையடுத்து, அது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 

Leave a Reply