• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல் குறித்த விசேட அறிவிப்பு

இலங்கை

ஜனாதிபதி தேர்தலை செப்படம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு இடையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன் தீர்க்கமான அறிவிப்பு எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய தேர்தல் சட்டமே தேர்தல் நடைமுறையை நிர்வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பதிவு பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாதத்துக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட செலவு 10 பில்லியன் ரூபாயாகும்  என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply