போதைப்பொருள் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன்
சினிமா
இயக்குனர் அமீர் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமீர் முன்பே அறிக்கை வெளியிட்டார், மேலும் விசாரணையை சட்டப்படி சந்திக்க தயார் என கூறி இருந்தார்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 2ம் தேதி டெல்லியில் இருக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.
விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன், தைரியமாக என் தரப்பு உண்மையை சொல்ல போகிறேன் என அமீர் இது பற்றி கூறி இருக்கிறார்.