• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியாவில் உணவகமொன்றில் தீ பரவல்

இலங்கை

நுவரெலியா நகரப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றின் சமையலறையில் இன்று ஏற்பட்ட தீயினால் சமையலறை முற்றாக எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த உணவகத்தில் ஏற்பட்ட வாயு கசிவே இந்த தீ பரவலுக்கு காரணம் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவிய சில நிமிடங்களில் நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினரால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் உடைமைகளுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply