• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா

இலங்கை

இயேசு பிரானின் உயிர்ப்பு பெருவிழாவான “உயிர்த்த ஞாயிறு தினம்” இன்று கிறிஸ்தவ மக்களினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு வழிபாட்டின்போது குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் இம்முறை உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்காக விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொஷான் மகேசனின் தலைமையில் உயிர்த்த ஞாயிறு தின வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்குது.
 

Leave a Reply