• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

அதன்படி இந்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் அண்மையில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply