• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குடும்ப பாங்கான முகம்! அற்புதமான நடிப்பு! 80 களில் கலக்கிய நடிகை சீதா

சினிமா

இவர் நடிக்கத்துவங்கிய ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக மட்டுமே நடித்தாலும் பின்னாளில் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடிக்கத்துவங்கினார். திரைப்படங்களில் மட்டுமின்றி இவர் சின்னத்திரையிலும் நடித்துள்ளார்.

நடிகை சீதா, சுண்டி இழுக்கும் கண்கள். சாய் ரந்தரி என்பதுதான் அவரின் உண்மையான பெயர். அம்லு என்பது செல்லப்பெயர். குடும்பத்திற்கு செல்லப்பெண். அழகு, திறமை என இரண்டும் நிறைந்த சிறந்த நடிகை. கண்களால் ரசிகர்களை கொள்ளை கொண்டவர். இவர் நடிகை மட்டுமல்ல தயாரிப்பாளரும் ஆவார்.

இவர் தமிழ், மலையாளம் தெலுங்கு சினிமாக்களில் அதிகளவில் பணியாற்றினார். 1985ம் ஆண்டில் நடிக்கத் துவங்கினார். அப்போது முதல் அவர் தமிழ் சினிமாவின் கதாநாயகியாகவும், சிறந்த நடிகையாகவும் வலம் வந்தார். 1991ம் ஆண்டு வரை நடித்தார். பின்னர் நடிப்புக்கு இடைவெளி கொடுத்திருந்த சீதா 2002ம் ஆண்டு மாறன் படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். ஆண் பாவம் என்ற படத்தில் 1985ம் ஆண்டு அறிமுகமானார்.

இவர் நடிக்கத்துவங்கிய ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக மட்டுமே நடித்தாலும் பின்னாளில் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடிக்கத்துவங்கினார். திரைப்படங்களில் மட்டுமின்றி இவர் சின்னத்திரையிலும் நடித்துள்ளார்.

இவர் நடிகர் பார்த்தீபனை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பின்னர் இவர் சின்னத்திரை நடிகர் சதீஷை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரிடம் இருந்தும் விவகாரத்து பெற்றார். சீதா – பார்த்தீபன் தம்பதிக்கு அபிநயா, கீர்த்தனா, ராக்கி என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவரது தந்தை மோகன் பாபுவும் தமிழ் நடிகர் ஆவார். இவரது தாய் சந்த்ராவதி. இவருக்கு பாண்டு, துஷ்யந்த் என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். சென்னையில் பிறந்தவர். இவருக்கு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. இவர் மிகவும் எதார்த்தமானவர்.

ஒரு திருமணத்தில் சீதாவை சந்தித்த பாண்டியராஜ், அவரது தந்தையிடம் விளையாட்டாக அவர் படத்தில் நடிப்பாரா என்று கேட்டுள்ளார். அவரது தந்தையும் ஒத்துக்கொண்டதையடுத்து சீதா ஆண்பாவம் படத்தில் அறிமுகமானார்.

அந்தப்படத்தில் நடிப்பதற்கு நிறைய டேக் எடுத்துக்கொண்டதால், சினிமாவே வேண்டாம் என்று நினைத்தாராம். ஆனால் அவரது தந்தைதான் அவரை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தார். சம்பளமே வாங்காமல் இந்தப்படத்தில் நடித்துள்ளார். படம் வெற்றி பெற்றதையடுத்து, இந்தப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் இவருக்கு கார் பரிசளித்துள்ளனர்.

அதற்கு பின்னர் பரபரப்பான நடிகையானார். தொடர்ந்து இவருக்கு புதியபாதை வாய்ப்புக்கு கிடைத்தது. இந்தப்படம் பயங்கர ஹிட்டானது. இந்தப்படத்தில்தான் பார்த்தீபன் - சீதாவின் காதலும் மலர்ந்தது. வீட்டில் மறுத்து, வீட்டைவிட்டு வெளியேறி கிட்டத்தட்ட சினிமா பாணியிலான முறையில் திருமணம் ஆனது. விவகாரத்துக்கு பின்னரும் குழந்தைகளுக்கான தேவைகளை இருவரும் சரியாக நிறைவேற்றி வருகிறார்கள்.

தற்போது எம்ராய்ட்ரி, ஓவியம், சமையல், மாடித்தோட்டம் என பிஸியாக உள்ளார். இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ள சீதாவின் மிகப்பெரிய உறுதுணையே அவரது தாய் தான் என பல இடங்களில் அவரே குறிப்பிட்டுள்ளார்
 

Leave a Reply