• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சரவண பொய்கையில் நீராடி... வாலி எழுத வேண்டிய பாடல் : கண்ணாதாசன் கைக்கு சென்றது எப்படி?

சினிமா

வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர், எழுத வேண்டிய ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு போட்டியாக கவிஞர் வாலி பாடல் எழுத வந்திருந்தாலும், தொடக்கத்தில் வாலி எழுத வேண்டிய ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியது பலரும் அறியாத ஒரு தகவல்.

தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.

அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர், எழுத வேண்டிய ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், தனது நண்பருடன் டிவிஎஸ் கம்பெனியில் வேலைக்கு சேர மதுரை கிளம்பியுள்ளார். அப்போது கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்ட வாலி மதுரை செல்லும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார்.

அப்போது எழுத்தாளர் மாரா அறிமுகம் கிடைத்து அவர், வாலிக்காக பலரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். அந்த வகையில் முக்தா சீனிவாசனிடம் சென்று, அவர் அப்போது இயக்கிக்கொண்டிருந்த இதயத்தில் நீ என்ற படத்தில் பாடல் எழுத வாலிக்காக பேசியுள்ளார். இப்போது எம்.எஸ்.வி வாலிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். முதல் பாடலிலேயே எம்.எஸ்.வியை வியக்க வைத்த வாலி அந்த படத்தில் மேலும் 3 பாடல்கள் எழுதும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

இந்த படத்திற்கு பின் கற்பகம் படத்தில் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த வாலியை, தயாரிப்பாளர் வேலுமணியிடம் அறிமுகப்படுத்தினார் எம்.எஸ்.வி. அப்போது வேலுமணி இது சத்தியம் என்ற படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்திற்கும் எம்.எஸ்.வி ராமமூர்த்தி இசையமைத்த நிலையில், கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் ஒரு பாடல் மட்டும் மீதம் இருந்துள்ளது. இந்த பாடலை வாலிக்கு கொடுக்கலாம் என்று எம்.எஸ்.வி கூறியுள்ளார்.

வாலியின் திறமை குறித்து எம்.எஸ்.வி பெருமையாக கூறியதால், இந்த ஒரு படத்தில் ஒரு பாடல் கொடுத்து அவரது திறமையை வீணடிக்க வேண்டாம். அடுத்து எம்.ஜி.ஆர் நடிப்பில் ஒரு கலர் படம் (படகோட்டி) தயாரிக்கிறேன். அதில் அனைத்து பாடல்களையும் எழுதட்டும் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக இது சத்தியம் என்ற படத்தில் மீதமிருந்த ஒரு பாடலையும் கண்ணதாசனே எழுதியுள்ளார். அந்த பாடல் தான் ''சரவண பொய்கையில் நீராடி'' என்ற பாடல்.
 

Leave a Reply