• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெண்களை தொடாத டைரக்டர் நடிகர் தமிழில் பார்த்து உள்ளீர்களா??

சினிமா

அது யார் தெரியுமா?

நம்ம ராஜேந்திர் அவர்கள் தான்.

ஆபாசம் துளி கூட இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரே தமிழ் வெற்றி படம்.

ஒரு தலை ராகம், காரணம் காதல் என்றாலே காமம் தான், தமிழ் திரைப்படங்களில்!! அந்த " பெண்களை தவறாக காட்டாமல் படம் ஓடாது" என்ற Cinema Myth என்பதை Debunk செய்தவர் ராஜேந்தர்!

வாசமில்லா மலரிது, என்ற பாடல்...எஸ்.பி.பி யாரு சேமித்தாலும் திறமையாக பாடுவேன் என்று காட்டுவார்.

பின்னர் வரும், ஜெயச்சந்திரன் பாடும் கடவுள் வாழும் கோவிலிலே, கற்பூர தீபம்! என்ற பாடலும் நன்றாக இருக்கும்.

கடைசியில் நான் ஒரு ராசி இல்லா ராஜா, ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள், பாடல்கள் சோகத்திலும் நன்றாக இருக்கும்.

நான் ஒரு ராசி இல்ல ராஜா பாட்டை பாடி, TMS, என் வாழ்க்கையே ராசி இல்லாமல் போய்விட்டது! என்று வருத்தப்பட்டார்!

எல்லோரும் ராசி இல்லாமல் போவது முக்கியமில்லை. படத்தை போராடி எடுத்த ராஜேந்தர் ராசி இல்லாமல் போகவில்லையே!! எனவே நல்ல பாடல் தான்.

இது குழந்தை பாடும் தாலாட்டு என்ற பாடலைப் பற்றி நான் கண்டிப்பாக சொல்லி ஆக வேண்டும்.

இளையராஜா இசையமைத்து, வைரமுத்து கவிதை எழுதினால்தான், இப்படி ஒரு பாடலை கொடுக்க முடியும். இருவரும் சேர்ந்து கொடுக்கும் திறமையை ஒரே ராஜேந்தர் கொடுத்துள்ளார்.

கல்லூரிக்கு செல்லும் பெண்கள் அந்த காலத்தில் எப்படி இருப்பார்கள் என்று யாராவது பார்க்க விரும்பினால், ஒரு தலை ராகம் திரைப்படத்தை எடுத்துப் பாருங்கள்.

பெண்கள் புடவை கட்டுவது தான் அழகு என்று நீங்களே சொல்லுவீர்கள்!!

இளையராஜாவை ஜெயிச்சது, ஏ ஆர் ரகுமான் இன்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!! ஆனால், உண்மையில் எப்பொழுதோ டி ராஜேந்தர் அந்த சாதனையை செய்து விட்டார்

இப்படிக்கு இயக்குனர்

 விஷ்ணு 

Leave a Reply