• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு

இலங்கை

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு கொழும்பு 7 இல் அமைந்துள்ள  தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில்  நேற்றைய தினம்  நடைபெற்றது.

கட்சியின் பிரதித் தலைவர் அக்பர் அலி (நாசார் ஹாஜி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஹிஸாம், கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான காதர் மற்றும் முஸம்மில் மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹரீப் மற்றும் பாயிஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply